Tuesday 5 January 2016

இது_சாப்பாட்டு_தத்துவம்

#இது_சாப்பாட்டு_தத்துவம்

#தோல்வி என்பது பெருங்காயம் போல. தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !

#குக்கரைப் போல இருங்கள். பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!

#லட்சியமும்_முட்டையும் ஒன்று. தவற விட்டால் உடைந்து விடும்!!!

#சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல, கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!

#வாழ்க்கை என்பது சிக்கலான இடியாப்பம் தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப் பாலைக் கலந்தால் சுவைக்கும்!

#நூடுல்ஸ் போல் தற்காலிகமானது பொய். உண்மை இட்லி போல நிரந்தரமானது!!

#கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள்; அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!

#தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது. அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள்; நம் மீதே சிந்தி விடும்.

#வெற்றி தாமதமாக கிடைத்தால், பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல, அனுபவிக்க முடியாது!!

#தன்னம்பிக்கை சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல, சமைப்பது உங்கள் கையில்தான்!

#வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது. வெந்த பின் தான் தெரியும்.

#வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது. நட்பு என்ற சட்னி வேண்டும்.

## படித்ததில் ருசித்தது; பின் சுட்டது##

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.