Friday 15 January 2016

வருங்கால வைப்பு நித

மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்?  என்பது தெரியாது.

வருமான வரிக்காக பிடிக்கிறார்களா?  அல்லது
வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.

இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.

எவ்வளவு பிடிக்கிறார்கள்?
***************************************
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.

நிரந்தர கணக்கு எண்
*******************************
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.

தெரிந்துகொள்வது எப்படி?
****************************************
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.

இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.

பணம் எடுப்பது எப்படி?
***********************************
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.

ஆன்லைன் பரிவர்த்தனை
******************************************
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்குச் சந்தையில் பி.எஃப்.
***************************************
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்
**********************
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.

நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.

நன்றி  : தி இந்து நாளிதழ் - 26.10.2015

குறிப்பு: பி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக, 01122901406  என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், தங்களது பி.எஃப். இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம்.

Wednesday 13 January 2016

2:05twitter.com/teakkadai: மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

twitter.com/jeevalancer: குழந்தைக்கு டயப்பர் மாட்டிவிடுவது என்பதே, ஆகச் சிறந்த அண்டர்கவர் ஆபரேஷன்!

twitter.com/bommaiya: தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்!

twitter.com/DrEzhilan: ரஜினி படம்னா, ரிலீஸுக்குப் பிறகு பஞ்சாயத்து. கமல் படம்னா, ரிலீஸுக்கு முன்னாடியே பஞ்சாயத்து. #அம்புடுதேன்!

twitter.com/MissLoochu: “உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை!

twitter.com/Railganesan: OMR -ல சம்பாதிக்கிறதை ECR-ல செலவு பண்றாங்க!

twitter.com/prakashalto: குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை!

twitter.com/chitrangadhai: ஆண்களின் பெருமையான குறைகளில் ஒன்று... ‘அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

twitter.com/BoopatyMurugesh: ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம். அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம். # ஆணாதிக்கச் சமூகம்!

twitter.com/ikrishs: ட்ரெய்ன்ல சைடு லோயர்னா, பிளாட்பாரத்துல படுத்திருக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்!

twitter.com/rajesh_off: பத்தாம் வகுப்புல ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பொண்ணுகிட்ட ‘அடுத்து என்ன பண்றதா ப்ளான்?’னு கேக்கிறானுங்க ஜெயா டி.வி-யில! # அடுத்து ப்ளஸ் ஒன்தான். இதுகூடத் தெரியாம...

twitter.com/stalingsk50: அடிக்கடி பாராட்டு விழா நடந்தால், அது தி.மு.க. ஆட்சி. அடிக்கடி பதவி ஏற்பு விழா நடந்தால், அது அ.தி.மு.க ஆட்சி. தட்ஸ் ஆல் யுவர் ஹானர்!

twitter.com/Iniyavan_Voice: கரப்பான் பூச்சியைப் பார்த்தா பயப்படுறாங்க... அவ்ளோ பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறாங்க. என்ன டிசைனோ தெரியல!

twitter.com/krishs: சாம்பார் சாதத்தை குட்டி டப்பால வாங்கிட்டு வர்றாங்க. பேசாம, அந்த ரெண்டு வாய்ச் சோறை கடைக்காரங்களையே ஊட்டிவிடச் சொல்லி, சாப்பிட்டு வந்திரலாம்!

twitter.com/natpuanrajesh: ஒருவேளை நாமெல்லாம் செவ்வாய்க் கிரகத்துல பொறந்து, செத்த அப்புறம் இந்த நரகத்துக்கு வந்துட்டோமோ! # டவுட்டு!

twitter.com/kalasal: இறந்துவிட்ட ஒரு நண்பனின் பெயரை அலைபேசியில் இருந்து அழிப்பதற்கு, ஒரு கொலை செய்வதற்கான துணிச்சல் தேவைப் படுகிறது. :(:(

twitter.com/Anandraaj04: ஜெயலலிதா வந்துதான் தொடங்கிவைக்கவேண்டும் என, முடிக்கப்பட்ட அரசுத் திட்டங்கள் பல காத்திருப்பதாகச் சொன்னார்கள் கடைசியில பார்த்தா... அது இட்லிக் கடைகளாம்!

twitter.com/writercsk: சமூக வலைதளங்களில் யாரும் கற்க வருவது இல்லை; எல்லோரும் கற்பிக்கவே வருகிறார்கள்!

twitter.com/jv.balaji: நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கோம். ஆனா, நூடுல்ஸே நொந்தது இதுதான் முதல் தடவை!

twitter.com/SriDevDev: நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க?

twitter.com/meenammakayal: சண்டையின்போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது... யாருக்கு யார் அடிமை என்பது!

twitter.com/LegDada: ‘மாப்ள அர்விந்த் சுவாமி மாதிரி இருப்பாரா?’னு கேட்க ஆரம்பிச்சதில் இருந்தே அவன் வில்லன்தான்டா எங்களுக்கு!

twitter.com/goingfake: ‘சத்தியமா நம்மளை உள்ள விடமாட்டாங்க’னு சின்ன காக்காமுட்டை சொல்றது ஞாபகம் வரும்... மேட்ரிமோனி சைட்ல சில பெண்கள் புரொஃபைல் பார்க்கும்போது!

facebook.com/nagarajachochthan: ஆபீஸ் லேப்டாப்ல ஃபேஸ்புக் பார்த்துட்டே கிளையன்ட் கால் அட்டெண்ட் பண்ற சுகம் இருக்கே... அந்தக் கால ரைட்டர்கள் ஆபீஸ்ல உட்கார்ந்து இலக்கியம் படைச்சதுக்கு ஈடானது!

twitter.com/vandavaalam: வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமே, நம்ம உடம்புக்கு நாமே டாக்டராகவும், நம்ம மனசுக்கு நாமே வக்கீலாகவும் இருப்பதால்தான்!

twitter.com/kaviintamizh: முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டுமே!

twitter.com/bottatto: Fact என்னன்னா, 88% மனைவிகளுக்கு தன் புருஷனோட ஃப்ரெண்ட்ஸைப் பிடிக்காது. 98% கணவன்களுக்கு தன் மனைவியோட ஃப்ரெண்ட்ஸை ரொம்பப் பிடிக்கும்!

twitter.com/yaaro_: ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!

twitter.com/ponraam: நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான், சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்!

twitter.com/kumarfacutty: யாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்!

twitter.com/Jana_Vel:  பொதுவாக எந்தப் பெண்ணைக் கேட்டாலும் ‘எனக்கு மழையில நனையிறது ரொம்பப் புடிக்கும்’னு சொல்வாங்க. ரோட்ல பார்த்தா, ஒரு பக்கியையும் காணோம்!

facebook.com/tmaniji:  முதல்ல நீதியை வாங்கினாங்க; இப்ப சத்யம்; இன்னும் நேர்மை பாக்கி இருக்கே!

twitter.com/Senthilbds: ஆத்திகன், கடவுளை ஊத்தி ஊத்திக் கழுவுறான்; நாத்திகன், கழுவிக் கழுவி ஊத்துறான்!

twitter.com/ashokiie:  ‘மூடு டாஸ்மாக்கை மூடு...’ பாடலுக்காக கோவனைக் கைதுசெய்த தமிழ்நாடு அரசு, ‘ஓப்பன் த டாஸ்மாக் பாடலுக்காக அனிருத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆவன செய்ய வேண்டும்!

twitter.com/vanithaj: வீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது. டெக்னாலஜி மனஅழுத்தம் தருகிறது!

twitter.com/powshya:  எவ்வளவு பிற்போக்கா சிந்திச்சாலும், கடவுள் நம்பிக்கை வர மாட்டேங்குது. எவ்வளவு பகுத்தறிவா சிந்திச்சாலும் பேய் பயம் போக மாட்டேங்குது!

twitter.com/mpgiri: ரஹ்மானே லாங் டிரைவ் போனா, ராஜா பாட்டுதான் கேட்பார்னு நினைக்கிறேன்!

twitter.com/gowtwits: ‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்!

twitter.com/Siva_D_offl: அஜித் - விஜய் ரசிகர்கள், அமெரிக்காவுக்குத் தெரியாமல் சண்டை போடுங்கள். தெரிந்துவிட்டால், ஆயுத சப்ளையை ஆரம்பித்துவிடுவார்கள்!

twitter.com/deepishtalks : ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்!

twitter.com/ini_avan : ‘உயிர் பலியைத் தடுக்கவே ஜல்லிக்கட்டுக்குத் தடை’   - அப்போ டாஸ்மாக்ல சத்து   டானிக் விக்கிறாங்களா யுவர் ஹானர்?

twitter.com/suriikumar: இந்தியாவில் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதன் அர்த்தம், ‘நகருப்பா... வழியில நிக்காதே’ என்பதே!

twitter.com/laksh_kgm : கடவுளைப் படைத்தவனே இன்னும் சுத்தியலும் கையுமாக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறான்!

twitter.com/minimeens: அவன் - ஹலோ! அவள் - சொல்லுங்ணா! # உலகின் மிகச் சிறிய காதல் தோல்விக் கதை!

twitter.com/ashoker_UHKH : மீசை வெச்சா சந்திரன்; மீசை எடுத்தா இந்திரன்; மீசையே முளைக்கலேனா எந்திரன்!

twitter.com/jill_online:  ஒருவன் தன்னைவிட்டு விலக மாட்டான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, அவனை இந்தப் பெண்கள் படுத்தும்பாடு இருக்கிறதே... அம்மம்மா அய்யய்யோ!

twitter.com/Lorrykaran:  அப்பாக்கிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்கு சோகமய மானது!

twitter.com/ManiMaindhan:  கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. `ஏன் இப்படி இருக்கிறார்?’ என்பதில்தான் என் எல்லா சந்தேகமும்!

twitter.com/kasaayam: பசங்க குடிச்சுட்டு `மச்சி ஸ்மெல் வருதா?’னு ஊதிக் காட்டுற மாதிரிதான், பொண்ணுங்க மேக்கப்ல `கொஞ்சம் ஓவரா இருக்கா?’ன்றதும்!

twitter.com/tamilreporter: நிலம் கையகப்படுத்த சட்டம் போட்டாச்சு. தற்கொலை தப்பில்லைன்னும் சொல்லியாச்சு # விவசாயிகளின் மீது அக்கறைகொண்ட அரசாங்கமேதான்!

twitter.com/ammuthalib: குஸ்கா என்பது ‘மக்கள் பிரியாணி’!

twitter.com/i_Soruba:  `வீட்ல இருக்கும்போதுகூட வேலை செய்யணுமா?’ `வீட்ல இருக்கும் போதாவது வேலை செய்’ - அம்மா நோஸ் ஆல் டீட்டெய்ல்ஸ் :-(

twitter.com/thoatta : காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்!

Sunday 10 January 2016

New business rule

MDRT MADE EASY

கறி வேப்பிலை

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

��கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

��இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

��சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

��இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

��செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

��முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

��சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
��கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்...

Jeevan SHIKHAR

LICs NEW PLANs

Why LIC

MDRT

Revival Campaign